Tuesday, 29 January 2013

பாரதி கண்ணம்மா - கவிஞர் கண்ணதாசன்


பாரதி கண்ணம்மா 

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா


பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னையா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா


ஒரே ராகங்களைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்
ஒரே ராகங்களைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம் மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா


நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி
பலவகை நறுமணம் தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா


பாரதி கண்ணய்யா நீயே சின்னய்யா கேளிதை பொன்னய்யா
அதிசய மலர்முகம், தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா


விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும்
விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும்
காலை வரை காமன் கனை பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும் இடையிடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா


அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்
அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்
முதன்முதல் பயம் வரும் வரவர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home