Thursday, 24 January 2013

திரிபுகள்


சங்கீதம்
இரைச்சலின் கூட்டணியாய்
கவிதை
இருண்மையின் திமிராய்
கலை
விலைமகளின் உதட்டுச்சாயமாய்
மதம்
கடவுள் விற்கும் கள்ளச்சந்தையாய்
அன்பு
பணத்தின் புன்னகையாய்
அழகு
பிணத்தின் நிர்வாணமாய்
காதல்
சந்தர்ப்பங்களின் ரகளையாய்
இல்லறம்
காதலின் சமாதியாய்
புணர்ச்சி
தூக்கம் அழைக்கும் உடற்பயிற்சியாய்
இருத்தல்
சாகப் பயந்தவர்களின் சம்மதமாய்
கல்வி
இருதயம் கொன்று வயிற்றில் புதைக்கும் ஏற்பாடாய்
இயற்கை
வருடம் ஒரு முறை வாழ்த்து மடல் ஓவியமாய்
சட்டம்
ரூபாய்க்குத் திறக்கும் ஜன்னலாய்
நீதி
டாலருக்குத் திறக்கும் கதவாய்
இளமை
உடல் கொல்லும் இன்பமாய்
முதுமை
இன்பம் கொன்ற உடலாய்
திரிந்தும் பிறழ்ந்தும
தேய்ந்த பின்றை
புளித்த சாராயம் ஆகாதா என்ன
வாழ்வெனும்
அமிர்தம் !

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home