அலைபாயும் மனம்!!!
நண்பர்கள் இரண்டு பேர் கொடி பறப்பதைப் பற்றி பேசிக் கொண்டு வந்தனர். அப்போது அவர்களுள் ஒருவன் "இந்த கொடி காற்றினால் தான் பறக்கிறது" என்று சொன்னான்.
மற்றவனோ "இல்லை, இது கொடி, ஆகவே நகர்கிறது" என்று கூறினான்.
அப்போது அந்த வழியாக வந்த ஜென் மாஸ்டர் அவர்களின் விவாதத்தை கேட்டு, அவர்களது விவாதத்திற்கு முடிவு கட்ட, அவர்களை கடக்கும் போது "காற்றில்லாமல் கொடியோ, கொடி இல்லாமல் காற்றாலோ எதையும் நகர்த்த முடியாது. நமது மனம் தான் அனைத்திற்கும் காரணம்" என்று சொல்லிச் சென்றார்.
Labels: ஜென் கதைகள்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home