Tuesday, 5 February 2013

ஆற்றின் மறுபக்கம்!!!

 
 
ஒரு நாள் இளம் புத்த துறவி ஒருவன் தன் வீட்டிலிருந்து பயணத்தை தொடர்ந்தான். அப்போது வீட்டின் முன் இருக்கும் ஒரு பரந்த ஆற்றை பார்த்தான். அப்போது அந்த பயணத்திற்கு தடையாக இருக்கும், இந்த ஆற்றை எப்படி கடப்பது என்று மணிகணக்கில் ஒரே யோசனையுடன் இருந்தான். அவ்வாறு அவன் யோசித்துக் கொண்டிருக்கையில், ஆற்றின் மறுபக்கம் இருக்கும் ஒரு பெரிய துறவியைப் பார்த்தான். 
 
பின் அவரை கனத்த குரலுடன் அழைத்து, ஒரு பெரியவர் என்ற மரியாதை இல்லாமல் "ஓ புத்திசாலியே, எப்படி மறுகரையை அடைவது என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டான். அதற்கு அந்த பெரிய துறவி சற்று யோசித்து, அந்த ஆற்றை பார்த்து, கனத்த குரலுடன் "மகனே, நீயே மறுகரையில் தான் இருக்கிறாய்" என்று சொல்லி சென்று விட்டார்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home