Saturday, 9 March 2013

எழுதிக் கொண்டிருந்தான் அவன்

 photo aadhi_zps26052626.jpg
யோசனையின்
ஆழத்தில் இறங்கி
எதையோ அவன் தேடிக் கொண்டிருந்தான்

அத்தருணத்தில் வீரிட்டலறியது
என் அலைபேசி..

அமைதியான உறக்கத்திலிருந்து
எழுப்பப்பட்டவனை போலப்
பிரக்ஞை அறுபட
என்னை பார்த்தான் அவன்..

சின்ன குறுகுறுப்புமின்றி
அவ்வறையிலேயே நின்று
பேசத்துவங்கினேன் நான்
சத்தமாய்....

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home