வேப்பமரம்....!- மருது அழகுராஜ்
நீர் ஊற்றி
நான் வளர்த்து
நிழல்கொடுத்த வேப்பமரம்
சூரியனின் வெப்பத்தை
சுகமாக்கி தந்தமரம்
வீடுநோக்கி வரும் காற்றை
வேடு கட்டி தந்த மரம்
குருவிக்கு பழம் கொடுக்கும்
கூடுகட்ட இடம் கொடுக்கும்
நேசமா நான் நெனச்சமரம்
நேத்து புயலில் விழுந்திடுச்சே
விழுந்த மரம் எழுந்துவந்து
நிலைக் கதவா நின்னிருச்சே
நிலைக்கு ரெண்டுதுண்டு
கதவுக்கு நாலுதுண்டு
அதுபோக அத்தனையும்
அடுப்புக்கு வெறகாகி
விசுவாசம் காத்திருச்சு
வீட்டுக்கதவா ஆகிடுச்சு....
நான் வளர்த்து
நிழல்கொடுத்த வேப்பமரம்
சூரியனின் வெப்பத்தை
சுகமாக்கி தந்தமரம்
வீடுநோக்கி வரும் காற்றை
வேடு கட்டி தந்த மரம்
குருவிக்கு பழம் கொடுக்கும்
கூடுகட்ட இடம் கொடுக்கும்
நேசமா நான் நெனச்சமரம்
நேத்து புயலில் விழுந்திடுச்சே
விழுந்த மரம் எழுந்துவந்து
நிலைக் கதவா நின்னிருச்சே
நிலைக்கு ரெண்டுதுண்டு
கதவுக்கு நாலுதுண்டு
அதுபோக அத்தனையும்
அடுப்புக்கு வெறகாகி
விசுவாசம் காத்திருச்சு
வீட்டுக்கதவா ஆகிடுச்சு....
Labels: மருது அழகுராஜ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home