Wednesday, 27 March 2013

தங்கத் தோணியிலே

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ
வண்ணப் பாவை கன்னித் தேனை
கன்னம் என்னும்கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ

தஙத் தோணியிலே தவழும் பொன்னழகே
நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ

அல்லி பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
கிள்ளும்போதே கன்னிப் போகும் பூ அல்லவோ
அஞ்சும் கெஞ்சும் ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ
அச்சம் வெட்கம் விட்டு போனால் தானே வராததோ

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home