Thursday, 14 March 2013

மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க!

How Care Your Home This Monsoon மழைக்காலம் வந்தாலே மனிதர்களை மட்டுமல்ல வீடுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும் இல்லையெனில் வீட்டின் கதவு, ஜன்னல், சுவர்கள் அனைத்தும் பாழாகிவிடும். மழைக்காலத்தில் மரக்கதவு, ஜன்னல்களை மூடித்திறப்பதும் கடினம் தான். எனவேதான் குடும்பத்தலைவிகளுக்கு வீட்டை பராமரிப்பு என்பது, மழைக்காலத்தில் சற்றே கூடுதல் வேலைதான். என்ன செய்தால் எளிதாக வீட்டின் பராமரிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
 
 மழைக்காலத்தில் தரை முழுவதும் கிருமிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் எனவே வீட்டின் தரைகளை கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
 
 வீட்டை கழுவி விடாமல், மாப்' கொண்டு துடைத்தால் ஈரத்தை தவிர்க்கலாம்.வீடுமுழுவதும் சுத்தமான சாம்பிராணி புகையை அடிக்கடி காட்டினால், கொசுக்கள் ஓடிவிடும் வீடும் மணக்கும்.
 
 மிதியடிகளை, இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும். துணிகள் காய்ந்தாலும், புழுக்கமான நாற்றம் வரும். எனவே துணிகளுக்கும் டெட்டால் போட்டு துவைக்கவேண்டும். காலையில் துவைத்த துணிகளை, வெயில் இருக்கும் போதே எடுத்துவைத்தால், மீண்டும் ஈரப்பதம் படியாது. பூஞ்சையும் வராது. 
 
கழிப்பறை சுத்தம் மழைக்காலத்தில் ரொம்ப அவசியம். சுவர்களும் ஈரம் படிந்திருப்பதால் துர்நாற்றம் வரும். கிருமிநாசினி திரவத்தை தினமும் தெளிக்க வேண்டும். மரக்கதவு, ஜன்னல்கள் ஈரத்தால் இறுகிவிடும். திறந்து, மூடுவது கஷ்டமாக இருக்கும். 
 
அடிக்கடி எண்ணெய் இட்டு, பராமரிக்க வேண்டும். வீட்டில் கப்போர்டு, ஷூ ஸ்டாண்டு போன்ற இடங்களில் சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைக்கலாம் மழைக்காலத்தில் பூச்சிகள் அடைவது தவிர்க்கப்படும். 
 
மழைக்காலத்தில் பெட்ரூம், ஷோபா போன்ற இடங்களில் பயன்படுத்தும் விரிப்புகள், தலையணை உறைகளை லைட்கலரில் உபயோகிக்க வேண்டாம் ஏனெனில் அவை எளிதில் அழுக்காகிவிடும். எனவே டார்க் கலர் விரிப்புகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home