Saturday, 9 March 2013

வீழும் உலகப் பொருளாதாரம்

 photo aadhi_zps26052626.jpg

எச்சரிக்கைக் குறிகளோடு
வீழ்ந்தவாரிருக்கிறது
உலக பொருளாதாரம்..

முதலீட்டாளர் முதல்
முடித்திருத்தகர் வரை
யாவரையும் தன் கோரக்குரலால்
குலை நடுங்க வைக்கிறது..

ஊதிய குறைப்பு
ஊக்கத்தொகை நிறுத்தம்
சலுகைகள் நீக்கம்
பணிப்பறி போதல் என்று
ஏதாவது ஒரு உருவத்தில்
ஏற்படுத்துகிறது மன அழுத்தத்தையும்
நாளை பற்றிய கேள்வியையும்
எல்லோரிலும்..

கூடும் பளுவால் உண்டாகிறது
குடும்பங்களிலும்
நெருக்க குலைவுகள்..


துண்டு விழும் செலவறிக்கை..
துண்டுகளோடு காத்திருக்கும் கடன் அட்டை..
துண்டு போட ஆயத்தமாகும் நிதிநிறுமவணங்கள்
என்று துண்டு மயமத்தில்
துண்டாகி கொண்டிருக்கின்றன நம்பிக்கைகளும்..

அமுதக்குடம் ஈயும் பணப்பாற்கடலில்
ஆலகாலம் மேல்வந்த பிறகுதான்
நிலையாமையின்
அர்த்தம் கசடற விளங்கியது..

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home