Tuesday, 29 January 2013

அப்படியா?

ஒரு ஊரில் ஒரு ஜென் துறவி இருந்தார். அவர் இடத்துக்கு அருகில் ஒரு அழகான பெண்ணும் தன் தாய் தந்தையருடன் வசித்து வந்தாள்.

ஒரு ஆண்டு அவள் தாய் தந்தையர் வேறொரு நாட்டுக்கு போய்விட்டு வந்து பார்க்கையில் அவள் கையில் ஒரு குழந்தை இருந்தது.

யார் உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்று கேட்கவும் அவள் நம் துறவியைக் கையைக் காட்டினாள்.

துறவியைக் கடிந்து கொண்ட அவள் பெற்றோர், குழந்தையை நீர் தான் வளர்க்க வேண்டும் என்றனர்.

அதற்கு துறவி, "அப்படியா?" என்றார்.

 குழந்தையைத் தாமே வளர்த்தார்.

 ஆறு மாதங்கள் குழந்தைக்கான பாலைக் கூட பிச்சையெடுத்தே ஊட்டுவார்.

பொறுக்க இயலாத அந்தப் பெண் ஒரு நாள் தமது பெற்றோரிடம் குழந்தையின் தந்தை ஒரு மீன் பிடிப்பவன் என்று ஒப்புக் கொண்டாள்.

மிகவும் வருத்தத்துடன் மன்னிப்புக் கேட்ட அந்தப் பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு துறவி பேசிய வார்த்தை, "அப்படியா?".

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home