உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்
உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் சற்றே அடைந்திருக்கலாமென
அடைந்திருந்த கணங்களிலோ
அதற்கு மேல் அடைய எதுவுமே இருந்திருக்கவில்லை
இழப்பின் கணங்கள்
இந்தக் குளிர் இரவில்
தின்று வாழ்கின்றன
அடைதலின் கணங்களை
- மனுஷ்ய புத்திரன்
Labels: மனுஷ்யப் புத்திரன்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home