சினேகிதிகளின் கணவர்கள்
அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்
.
எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின் குறிப்பை இணைத்துவிடுகிறாள்
.
எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை
எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள்
எவ்வளவு தூரத்தில்
அமையவேண்டும்
எந்தக் கணத்தில்
வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும்
பழகிக்கொண்டேன்
.
நான் குழப்பமடைவதெல்லாம்
சினேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பதென்று
.
ஒரு சிநேகிதியை
’சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று
Labels: மனுஷ்யப் புத்திரன்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home