Saturday, 19 January 2013

பாரதி பற்றி பாரதிதாசன் - பாரதிதாசன்


http://www.chithirai.net/images/Bharathidasan.jpg


பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!

நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா!

காடு கமழும் கற்பூரச் சொற்கோ!

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்!

திறம்பட வந்த மறவன், புதிய

அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்

படரும் சாதிப்படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!

என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!

தமிழால், பாரதி தகுதி பெற்றதும்

தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்

எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்




Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home