தக்காளி ஜாம்
தேவையான பொருட்கள்:
தக்காளி சாறு - 1 கப்
சீனி - 1/2 கப்
ஆரஞ்ச் தோல்(orange zest) - 2 டீஸ்பூன்
லெமன் சாறு -1 டீஸ்பூன்
செய்முறை:
தக்காளிகளை கழுவி வைத்துக் கொள்ளவும்.
ஆரஞ்ச் தோலின் மேற்பகுதியை மட்டும் சுரண்டி வைத்துக் கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீர் விட்டு கொதி வந்ததும் தக்காளிகளை வைத்து 6, 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தக்காளியின் தோல் வெடித்து, பிரிய ஆரம்பிக்கும் போது இறக்கி விடவும்.
சிறிது சூடு ஆறியதும் தோல் நீக்கி, உள்ளே இருக்கும் தண்டுப் பகுதி நீக்கி, கையினால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடி கனமான சட்டியில் தக்காளி சாறு, சீனி போட்டு, சிம்மரில் விடவும். இடையிடையே கிளறி விடவும்.
கலவை ஓரளவு இறுக ஆரம்பித்ததும் ஆரஞ்ச் தோல் (zest)போடவும்.
சிறிது நேரம் கழித்து லெமன் சாறு சேர்த்து இறக்கவும்.
சுவையான தக்காளி ஜாம் தயார்.
குறிப்பு: தக்காளி ஜாம் ஓரளவு கொழ கொழப்பாக இருக்கும் போதே லெமன் சேர்த்து, இறக்க வேண்டும். நன்றாக சீனிப் பாகு இறுகினால் ப்ரெட்டில் தடவ முடியாது.
Labels: ஜாம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home