ஆலு பனீர் சப்ஜி
தேவையானவை
உருளைக்கிழங்கு - 3
பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியாதூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - ருசிக்கு
செய்முறை:-
உருளைக்கிழங்கை நன்கு கழுவி, நீளவாக்கில் நறுக்குங்கள், பனீரையும் வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து சீரகம், ஏலக்காய் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும் வரை நன்கு வதக்குங்கள்.
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்குங்கள் அத்துடன், பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பனீர், உருளை, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறி, சிறு தீயில் மூடிவைத்து வேகவிடுங்கள்.
வெந்ததும் கரம் மசாலா, மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள். சூடாக பரோட்டாவுடன் பரிமாறுங்கள்.
உருளைக்கிழங்கு - 3
பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியாதூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - ருசிக்கு
செய்முறை:-
உருளைக்கிழங்கை நன்கு கழுவி, நீளவாக்கில் நறுக்குங்கள், பனீரையும் வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து சீரகம், ஏலக்காய் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும் வரை நன்கு வதக்குங்கள்.
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்குங்கள் அத்துடன், பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பனீர், உருளை, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறி, சிறு தீயில் மூடிவைத்து வேகவிடுங்கள்.
வெந்ததும் கரம் மசாலா, மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள். சூடாக பரோட்டாவுடன் பரிமாறுங்கள்.
Labels: சைவம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home