Sunday, 24 February 2013

பாதங்களையும் கவனியுங்க... Take care of your Feets

Take care of your Feets - Beauty Care and Tips in Tamil
நாம் முகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு பாதங்களை பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உடல் எடை முழுவதையும் தாங்குபவை பாதங்கள்தான். எனவே பாதங்களின் கீழ்ப்பகுதியை அவ்வப்போது கவனிக்கவும். சிராய்ப்பு, வீக்கம், வெடிப்பு அல்லது சிறு சிறு காயங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

பாதங்களின் சரும நிறம் மாறாமல் இருக்க வேண்டும். ஏதேனும் மாறுதல் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகவும். கால் விரல்களுக்கு நடுவில் அல்லது கீழே வலி, அரிப்பு அல்லது தொற்று நோய் பாதிப்பு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக தயங்கக் கூடாது.

பாதங்களில் மாய்சரைசர் தடவவும். பாதங்களை சுத்தம் செய்து லோஷன் தடவவும். ஆனால் அதிக க்ரீம் அல்லது லோஷன் தடவக் கூடாது. எப்போதும் கால் நகங்களை நேராக வெட்டவும். இல்லையேல் ஓரங்களில் உள்ள தசைகள், உள்பக்கமாக வளர்ந்து வலி உண்டாகும்.

காலை, மாலை இருவேளையும் பாதங்களை டெட்டால் கலந்த நீரில் துடைக்கவும். நகங்களைச் சரியான முறையில் வெட்டி தேய்க்கவும். இரவு வீட்டிற்கு வந்ததும் பாதங்களைத் தேய்த்து துடைத்து, லேசாக க்ரீம் தடவினால் மென்மையாகும். நகங்களை ஒட்ட வெட்டாதீர்கள். இதனால் நகக்கண்களில் நோய்த் தொற்று கிருமிகள் தங்கி விடும் வாய்ப்புள்ளது.

பெடிக்யுர்

மாதத்தில் ஒரு முறை அழகு நிலையம் சென்று பெடிக்யுர் செய்துகொள்ளவும். ஆனால் பெடிக்யுரில் உபயோகிக்கப்படும் உபகரணங்கள் கொதி நீரில் போட்டு சுத்தம் செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

ஒரே இடத்தில் நின்றபடி இரண்டு பாதங்களையும் மாறிமாறி ஒரு பக்கமாக ஐந்து முறை சுழற்றவும். பிறகு 5 முறை வேறு பக்கம் சுழற்றவும்.

மாடி படிக் கட்டுகளில் அடிக்கடி ஏறி இறங்குவதும், பாதங்களுக்குச் சரியான உடற்பயிற்சிதான்.

தினசரி பாதங்களை உப்பு கலந்த குளிர்ந்த நீரில் சிறிது நேரம் மூழ்கும்படி வைக்கவும். இதே போல சிறிது நேரம் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரிலும் வைத்து எடுக்கவும்.

மேற்கூறிய குறிப்புகளை முழுமையாக கடை பிடித்தால், பாத வலி நீங்குவதோடு, முதுகு வலி, மூட்டு வலி, கால் வலியிலிருந்தும் விடுதலை பெறலாம்.

தட்டையான பாதம் சில சமயங்களில் மூட்டுவலி குதிகால் மற்றும் இடுப்பு வலிக்கு காரணமாகிறது. இத்தகைய பாதங்களைக் கொண்டோர், செருப்பு தேர்ந்தெடுக்கும் போது மிக கவனமாக இருப்பது அவசியம்.

சிலரின் பாதங்கள் அதிக வளர்ச்சியடைந்து அகலமாக இருக்கும். இவர்களுக்கு மூட்டு மற்றும் தசை நார்களில் வலி உண்டாகலாம். அதனால் அவர்கள் சற்றே தட்டையான, காற்றோட்டமுள்ள காலணிகளை உபயோகிப்பது நல்லது.

கால்கள் மீது அதிக எடை அழுந்துவதால் ஆணிக்கால் எனப்படும் நோய் ஏற்படுகிறது. கால்களை தரையில் அழுந்த வைத்து நடக்க முடியாத அளவுக்கு வேதனை அளிக்கும் நோய் இது.

தோல் தடிப்பு, காய்ப்பு, நீர் கொப்புளங்கள் போன்ற வியாதிகளும் பாதங்களை சிர்குலைத்து விடும்.

பாத எலும்புகள் பெரியதாக வளர்ந்து விட்டாலும் பாதங்களில் வலி எடுக்கும். இதனால் நடப்பது கஷ்டமாகிறது. கூர்மையான, மெல்லிய, உயரமுடைய செருப்புகளை அணிவதால் இப்படி ஏற்படுகிறது.

பாதத்தின் தோல் தடிமனாகி விட்டாலும் பாதங்களில் வலி ஏற்படும். அதிக உடல் எடை மற்றும் தேய்ந்து போன செருப்புகளை உபயோகிப்பதாலும் இப்பிரச்சினை ஏற்படுகிறது.

பூஞ்சை தொற்று நோய், அரிப்பு, சிறு சிறு கொப்புளங்கள், குதிகாலில் வெடிப்பு ஆகியவை பாதங்களில் ஏற்படும் பொதுவான பிரச்சினை. இவற்றிலிருந்து விடுபட கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்.

ஒரு நாளில் குறைந்தபட்சம் 2 முறை பாதங்களை சுடு நீரினால் கழுவி நன்றாக ஆற விடவும்.

காட்டன் காலுறைகளை உபயோகிக்கவும். அவை எளிதில் வியர்வையை உறிஞ்சிக் கொள்ளும்.

நீச்சல் குளத்துக்கு அருகில் வெறும் காலுடன் நடக்காதீர். ஏனெனில் மற்றவர்கள் காலில் இருந்து நோய்த் தொற்ற வாய்ப்புள்ளது. நீச்சலுக்குப் பிறகு சுத்தமான நீரில் அவசியம் குளிக்கவும்.

நடைபயிற்சி நல்லது

நீங்கள் தினமும் எவ்வளவு தூரம் காலாற நடக்கிறீர்களோ, அது உங்கள் பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஏனெனில் நடைப்பயிற்சி, பாதங்களில் ரத்த ஓட்டம் சீரடைய உதவுகிறது. மேலும், பாதங்களில் நார்கள் உறுதியாவதும் உங்கள் நடையில்தான் இருக்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும், உடல் எடையை சிராக வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home