Saturday, 9 March 2013

தலைப்பற்ற கவிதை - 1

 photo aadhi_zps26052626.jpg
ஊமையாய் இறுகிவிட்டிருந்தது
உன் வார்த்தையின் வலியக்கரங்கள்
என் உயிரின் குரல்வளையை நெரித்த
அத்தருணம்...

அது ஒரு மரணத்தைப் போல
தற்செயலான நேர்ச்சி அல்ல..

ஒரு படுகொலையை போல
திட்டமிடப்பட்ட நிகழ்வு..

என்றாலும்,
அதை நீ செய்திருக்க வேண்டாம்
உன் பூ உதடுகளால்..

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home