Saturday, 2 March 2013

சில்லுகள் - 2

 photo aadhi_zps26052626.jpg

புன்னகை

எப்போதும்
எனை கடந்து போகையிலெல்லாம்
மறவாமல் ஒரு புன்னகையை உதிர்க்கும்‌
எதிர்வீட்டு தாத்தாவின் மரணத்தை
அறிந்த தருணத்திலிருந்து
ம‌ன‌தை குடைந்து கொண்டிருக்கிற‌து
போனமுறை அவருக்கு உதிர்க்க‌ த‌வறிய‌
பதில் புன்னகை

விடுவித்துக் கொளல்

இந்த வாழ்வின்
எல்லா துன்பத்துயர நெருக்கடி காரியங்களிலிருந்தும்
என்னை ஒட்டுமொத்தமாய் விடுவித்துக் கொள்வதென‌
தீர்மானித்தப் பிறகே
உன்னை இன்னும் தீவிரமாய்
காதலிப்பதென்று முடிவெடுத்தேன்

இரண்டு கவிதைகள்

பெருமதில்களால் நிர்மானிக்கப்பட்ட‌
அரண்களை கடந்து
எவராலும் நுழைந்துவிட முடியாது
உம் மனத்திற்குள்
சமயத்தில் உங்களாலும் கூட‌

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================

புன்னகையின் நிழலில்
இளைப்பாறிவிட்டு
புரப்படுகையில்
பயணத்தில் உண்டாகிற
தாகத்திற்கு வேதைப்படுமென்று
மொண்டு கொள்கிறாயோ
கொஞ்சம் எனது கண்ணீரை

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home