Monday, 25 March 2013

நிலவே என்னிடம் நெருங்காதே



நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில நானில்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கோடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில நானில்லை

ஊமையின் கனவை யார் அறிவார்
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடிய மேகம் கலையுமுன்னே
நீ பாட வந்தாயோ வெண்ணிலவே

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில நானில்லை

அமைதி இல்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் எனையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில நானில்லை

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home