Wednesday, 27 March 2013

மணமகளே மணமகளே

 

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே
குற்றம் குறை இல்ல ஒரு குந்துமணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே

வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி
வா வா பொன்மயிலே பொன்மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால்தானே
மாறும் மாங்குயிலே...மாங்குயிலே
இல்லம் கோயிலடி அதி பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம் என்றும் செல்வம் பொங்குமடி

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home