Saturday, 2 March 2013

காதல் - ‍‍தேவதைகளும், சாத்தான்களும்

 photo aadhi_zps26052626.jpg

உன்னுளிருந்து
யோர்தானென‌
பீறிட்டு வெளிப்பரவிய‌ நதியில்
மூழ்கியெழுந்தேன்

அப்பொழுது தன் வானத்தை திறந்து
காதல் சொன்னது
இவளே உன் அன்புக்குரியவள்
இவளை பின் தொடந்து கைகொள்
நித்ய வாழ்வை அடைவாய்

------------------------------------------------------------------

ஏதோ ஒரு மிருகத்தின் வாயில் சிக்கி
அரைகுறை உயிரோடு
ஊசலாடிய தருணத்தில்
எங்கிருந்தோ வந்த இன்னும் சில மிருகங்கள்
பீய்த்து பிடுங்கின என் மாமிசத்தை
ஒவ்வொரு சொட்டாய்
மீதமிருந்த உயிரும்
பார்வை மங்கிய விழிவழி வடிகையில்
உன்னை பார்த்தேன்
மிக சாந்தமாய் அமர்ந்து நீ
கலையை ரசிப்பது போல்
நான் கொல்லப்படுவதை
ரசித்துக் கொண்டிருந்தாய்
கருணைப் பொங்கும்
தேவதையின் கண்களுடன்..

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home