Thursday, 24 January 2013

மஹா கவி பாரதியார் பாடல்கள் - தேசீய கீதங்கள் - பாரத நாடு 4

தேசீய கீதங்கள்

1. பாரத நாடு
4. பாரத நாடு
ராகம்-ஹிந்துஸ்தானி தோடி

பல்லவி
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு

சரணங்கள்
1. ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
      மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
      கவிதையி லேஉயர் நாடு-இந்தப்
(பாருக்குள்ளே)

2.

தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
      ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
      தருவதி லேஉயர் நாடு- இந்தப்
(பாருக்குள்ளே)

3.

நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
      பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
      புகழினி லேஉயர் நாடு-இந்தப்
(பாருக்குள்ளே)

4.

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
      வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
      கடலினி லேஉயர் நாடு-இந்தக்
(பாருக்குள்ளே)

5.

வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
      தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
      உணர்வின லேஉயர் நாடு-இந்தப்
(பாருக்குள்ளே)

6.

யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
      யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
      அருளினி லேஉயர் நாடு-இந்தப்
(பாருக்குள்ளே)

7.

ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
      காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
      இனத்தினி லேஉயர் நாடு-இந்தப்
(பாருக்குள்ளே)

8.

தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
      ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
      சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப்
(பாருக்குள்ளே)

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home