Monday, 28 January 2013

ஃபருட் பஞ்ச் ஜூஸ்

 

பஞ்ச் பழங்களை ஸாரி… அஞ்சு பழங்களை மிக்ஸ் பண்ணி செய்வதால்தான் ஃப்ரூட்பஞ்ச்.

 தேவையான பொருட்கள் 

பப்பாளி_100 கிராம்,
 மேங்கோ_100 கிராம்,
ஆரஞ்சுப்பழம்_100 கிராம்,
திராட்சை_100 கிராம்,
எலுமிச்சம்பழம்_பாதியளவு,
சோடா (கோலிசோடா அல்லது ஸ்பிரிட்),
சுகர்_200 கிராம், வாட்டர் 10 மில்லி,
உப்பு _ 1 சிட்டிகை.

செய்முறை

எலுமிச்சம்பழத்தைத் தவிர மீதி நான்கு பழத்தையும் நன்றாக தோல் நீக்கி மிக்ஸியில் ஜூஸாக்கி விட வேண்டும்.

இல்லையெனில், பழங்களை சின்னச்சின்ன துண்டுகளாக கட் பண்ணிக்கொண்டு சுகரையும், தண்ணீரையும் கலந்து கொதிக்க வைத்து விட்டு, பிறகு எலுமிச்சம் பழத்தையும் சோடாவையும் சேர்த்துவிட்டால் ஃப்ரூட் பஞ்ச் ரெடி.

குழந்தைங்க இதை விரும்பிச் சாப்பிடுவாங்க. ஃபிரிஜ்ஜில் வைத்து எல்லோரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகி மகிழலாம்.

டயட்

பப்பாளியில் ஏ விட்டமின் அதிகம்.

ஆரஞ்சுல_சி விட்டமின், பப்பாளியைத் தவிர மீதி நான்கு பழமும் சிட்ரஸ் ஃபுரூட்ஸ். (சிட்ரஸ் அமிலம் நிறைந்தது)

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home