Tuesday, 5 February 2013

மங்களுர் ரசம்

பயத்தம் பருப்பு
தேவையான பொருள்கள்:
  1. பயத்தம் பருப்பு = 2 கரண்டி
  2. இஞ்சி = காலங்குலம்
  3. பச்சை மிளகாய் = 2
  4. தக்காளி = 2
  5. மிளகு = 1 ஸ்பூன்
  6. சீரகம் = 1 ஸ்பூன்
  7. தனியா = 1 ஸ்பூன்
  8. புளி = அரை எலுமிச்சை அளவு
  9. பெருங்காயம் = சிறிதளவு
  10. கடுகு = 1 ஸ்பூன்
  11. எண்ணெய் = 2 ஸ்பூன்
  12. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பயத்தம் பருப்பை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். தக்காளி நறுக்கவும்.
  • மிளகு, சீரகம் உடைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டவும். தனியாவை எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
  • எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து தக்காளி வதக்கிக் கொண்டு புளித் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். மிளகு, சீரகம் சேர்க்கவும்.
  • கொதிக்கத் துவங்கும் போது ஊறிய பயத்தம் பருப்பு வறுத்த தனியா, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான மங்களுர் ரசம்  தயார்.

மருத்துவ குணங்கள்:
  • பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home