எலுமிச்சை ஊறுகாய்

தேவையானப்பொருட்கள்:
- எலுமிச்சை பழம் – 4 அல்லது 5
- மிளகாய்த்தூள் – 2 முதல் 3 டீஸ்பூன் வரை
- பெருங்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
- வெந்தயப்பொடி – 1 டீஸ்பூன் (வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடிக்கவும்)
- உப்பு – 2 முதல் 3 டீஸ்பூன் வரை
- நல்லெண்ணெய் – 4 முதல் 5 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- ஒரு பாத்திரத்தில் 4 அல்லது 5 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் பொழுது, எலுமிச்சம் பழத்தை அப்படியே முழுதாகப் போட்டு, 5 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விடவும். பழம் சற்று வெந்ததும், அதை நீரிலிருந்து எடுத்து ஆற விடவும்.
- ஆறியபின், பழங்களை ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோ வைத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்திற்குள் வைத்து நறுக்கினால்தான், பழத்திலிருந்து வெளியே வரும் சாறு, அந்த பாத்திரத்திலேயே விழும்.
- நறுக்கியத்துண்டுகளை சற்று பரவலாக வைத்து, அதன் மேல் மிளகாய்பொடி, பெருங்காயத்தூள், வெந்தயப்பொடி, உப்பு ஆகியவற்றை தூவவும். ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி, கடுகு போட்டு, கடுகு வெடித்தவுடன், அதை எலுமிச்சம் பழத்துண்டுகளின் மேல் ஊற்றி, நன்றாகக் கிளறி விட்டு, வேறொரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
- உடனடியாக உபயோகிக்க ஏற்றது. குளிர்பதன பெட்டியில் வைத்திருந்தால், 4 அல்லது 5 நாட்கள் கெடாமல் இருக்கும்.
Labels: ஊறுகாய்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home