Friday, 1 March 2013

காத்திருக்கிறேன் - ஆதி


 photo aadhi_zps26052626.jpg

பனி இரவின் மறுநாளைய
காற்றை போல‌
நாளும் நீ விட்டு செல்லும்
நினைவுகளின் குளிரை
ஏந்தி திரிகிறேன்

காதலின் உன்மத்ததில்
அது தரும் இனிமையில்
அது உண்டாக்கும்
இனம் புரியா மகிழ்ச்சியில்
பித்தனென திளைக்கிறேன்

பூக்களின் மிக அழகிய தேவதையே
மொழியின் ரசமான சொற்களையெல்லாம்
தெரிவு செய்து
உன்னை பற்றி கவிதையெழுதுகிறேன்
அவையாவும்
இசை குறிப்புக்களெல்லாம்
உன் ஒலியற்ற முறுவலிடம் அடைவதை போல‌
நீ உட்சரிக்கும்
ஒரு 'butuuu'யிடம் தோற்று போகிறது

என் உள்முக தேடல்கள் அனைத்தும்
உன் முகத்தேடலகளாய்
உருமாறி கொண்டன‌

இலக்கு தெரியமலே
உன்னை தேடி ஒரு
பயணத்தை துவக்கிவிட்டன‌
அது தோல்வியின் வேட்டை நிலத்திலோ
வெற்றியின் நந்தவனத்திலோ முடியலாம்
முடிவே தெரியாத ஒன்றாகவும் ஆகலாம்
எனினும் என் பயணங்கள்
துவங்கிவிட்டன உன்னை நோக்கி

நீ ஒரு இழுத்து சாத்தப்பட்ட‌
கதவை போலவே இருந்தாலும்
கோயிலின் நடை திறக்க
காத்திருக்கும் பக்தனை போலவே
காத்திருக்கிறேன் உன் மன வாசலில்
Votes

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home