Wednesday, 27 March 2013

தமிழன்னைக்கு நன்றி


கொடிவருடிப் பூந்தென்றல்
குலவுகின்ற தென்பொதிகை
மடிவருடிப் பூத்தவளே!
மணித்தமிழே! மாற்றாரின்
அடிதிருடிப் பாடாமல்
அம்மா!நின் அரவிந்த
அடிவருடிப்பாட என்னை
ஆளாக்கி வைத்தனையே!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home