Monday, 4 February 2013

காபி ஐஸ் கிரீம்


தேவையான பொருட்கள்


பில்டர்காபி - 1 கோப்பை
சோள மாவு - கோப்பை
சர்க்கரை    - 1 கோப்பை
கோகோ பவுடர் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - ரு கோப்பை
பால் - 1 கோப்பை
பாலேடு    - கோப்பை


செய்முறை

பில்டர் காபி சூடாக இருக்கும்போதே அதில் கோகோ பவுடரை நன்கு கலந்து கொள்ளவும்.

பாதி பாலில் சோளமாவை கலந்து குழம்பாக வரும் வரை மிதான தீயில் வைத்து கிளறி எடுக்கவும்.

பிறகு எல்லாவற்றையும் பாலேட்டுடன் கலந்து 5 நிமிடம் நன்கு அடித்துக் கொள்ளவும்.

கலவையை கப்புகளில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்துக் குளிர விடவும்.

புது சுவையுடன் காபி ஐஸ் கிரீம் தயார்.


ஐஸ் கிரீம் விரும்பாத குழந்தைகள் இருக்க முடியாது. அதிலும் கோடை காலத்தில் பெரியவர்களும் விரும்புவது ஐஸ் கிரீம் வகைகளை.

கடையில் பெரியவர்களும் விரும்புவது ஐஸ் கிரீம் தரம் எப்படி இருக்குமோ, ஏதாவது கெடுதல் செய்து விடுமோ என்ற எண்ணம் இருப்பவர்களுக்காக வீட்டிலேயே தரமான ஐஸ் கிரீம் தயாரிப்பதற்கான செய்முறைகள் தரப்பட்டுள்ளன.

ஐஸ் கிரீம் தயாரிக்கும் போது கவனத்தில் வைத்துக்
கொள்ள வேண்டியவை.


ஐஸ் கிரீம் செய்ய வேண்டும் என விரும்புகிறவர்கள் முன்னதாகவே ஃப்ரிட்ஜை டீப்ராஸ் செய்தால் ஐஸ் கிரீம் மிகவும் சீக்கிரமாக செட்டாகும்.

ஐஸ் கிரீம் ஃபிரிட்ஜில் வைக்கும்போது மூடி வைக்க வேண்டும். ஃப்ரீஸரில் மட்டுமே வைக்கவும்.

ஐஸ் கிரீம் தயாரிக்க தரமான எஸன்சை பயன்படுத்த வேண்டும். ஐஸ் கிரீமில் ஜெலட்டின் என்ற ஒரு பொருளை சேர்ப்பர். ஜெலட்டினுக்கு பதிலாக சைனா கிராஸும் சேர்க்கலாம்.

சில சமயம் வீட்டில் ஐஸ் கிரீம் செய்யும்போது கடையில் வாங்குவது போல இல்லாமல் க்ரிஸ்டல்களாக இருக்கும். அவ்வாறு வராமல் இருக்கத் தேவையான பொருள்களை கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பின் ஒரு முறை எடுத்து மீண்டும் மிக்ஸியில் அடித்து வைத்தால் ஐஸ் கிரீம் நன்றாக வரும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home