Saturday, 2 March 2013

அடை மழை!- மருது அழகுராஜ்



கண்ணடிக்கும் மின்னல்கள்
எழுதி அனுப்பும்
காதல் கடிதங்களாய்
வந்து விழுந்தன
மழைத்துளிகள்...
அவற்றை
காதலை வெறுக்கும்
தந்தையாய் மாறி
தடுத்தன குடைகள்!
மேகத்திற்குள் நிலவு
குடைக்குள் அவள்
வெறுத்துப்போன மேகங்கள்
விடாது அழுதன
அடை மழை!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home