Tuesday, 16 April 2013

மலாய் பேடா

தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர். 
சர்க்கரை - அரை கப் 
கார்பிளவர் - 3 ஸ்பூன் 
குங்கும பூ - 5 ஸ்பூன் 
ஏலக்காய், சோம்பு - சிறிதளவு 
சிட்ரிக் அமிலம் - சிறிதளவு 
பிஸ்தா 
 செய்முறை 
முதலில் பாலை ஒரு வாணலியில் ஊற்றி நன்றாக பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும். குங்குமப் பூவை மற்றொரு பாத்திரத்தில் போட்டு சூடு செய்து அத்துடன் சிறிது பாலை ஊற்றி, குங்குமபூ கரையும் வரை கலக்க வேண்டும். 
 இத்துடன் காய்ச்சிய பாலை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கிளறிவிடவும். பின்னர் சிட்ரிக் அமிலத்தை சிறிது தண்ணீரில் கலக்கி இத்துடன் சிறிது சிறிதாக கட்டி சேராமல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 
கார்ன் பிளவர் மாவுடன் சிறிது பாலை சேர்த்து கலக்கி, இந்த கலவையுடன் சேர்க்கவும். தொடர்ந்து கிளறிவிட்டுக் கொண்டிருக்கவும். 
ஏலக்காய் மற்றும் சோம்புவை பொடி செய்து இத்துடன் சேர்க்கவும். சிறிது நேரம் ஆறவிட்ட பின், இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிறிய பேப்பர் கப்களில் வைத்து அதன் மீது பாதாம் பருப்பை தூவி அலங்காரம் செய்யவேண்டும். 
சுவையான மலாய் பேடா ரெடி.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home