கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 17
கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 17

பாவலரே!
பாவலரே! போலிகளாய்
இருக்கின்றீர்கள்!
கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்
செந்நெருப்பு விழிகொண்டு
சிறியெழ மாட்டீரோ?
சிச்சி! வானில்
புண்ணிருந்தாற் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!
பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையெனும்
பூவை அந்நாள்
செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்
சங்க மணித் தமிழ்தந்தாள்....
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில்
தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்... கவிஞர்களா?
செத்துப் போங்கள்!
ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?
தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?
வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்
நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்துமின்கள்!
சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்.... மாற்றார்
பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்... ஓடி
வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்
சொல்லெடுப்பீர்... பாவலரே!
இல்லையெனில் தொழில் விடுங்கள்
அதுவும் நன்றே!
இருக்கின்றீர்கள்!
கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்
செந்நெருப்பு விழிகொண்டு
சிறியெழ மாட்டீரோ?
சிச்சி! வானில்
புண்ணிருந்தாற் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!
பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையெனும்
பூவை அந்நாள்
செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்
சங்க மணித் தமிழ்தந்தாள்....
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில்
தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்... கவிஞர்களா?
செத்துப் போங்கள்!
ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?
தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?
வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்
நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்துமின்கள்!
சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்.... மாற்றார்
பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்... ஓடி
வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்
சொல்லெடுப்பீர்... பாவலரே!
இல்லையெனில் தொழில் விடுங்கள்
அதுவும் நன்றே!
தோழரே!
தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
பட்ட நரம்பில்
பழையபடி செந்நீர்
சொட்ட உணர்ச்சி
சுரக்க விரைந்தோடி....
தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
மானம் உறங்கியது!
மான மறத்தமிழர்
தானை உறங்கியது!
தாவி விரைந்தோடி...
தட்டுங்கள் தோழரே தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
மணித் தமிழின் கண்ணீர்
மறைய உலகில்
தனித் தமிழன் ஆட்சி
தழைக்க விரைந்தோடி...
தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
பட்ட நரம்பில்
பழையபடி செந்நீர்
சொட்ட உணர்ச்சி
சுரக்க விரைந்தோடி....
தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
மானம் உறங்கியது!
மான மறத்தமிழர்
தானை உறங்கியது!
தாவி விரைந்தோடி...
தட்டுங்கள் தோழரே தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
மணித் தமிழின் கண்ணீர்
மறைய உலகில்
தனித் தமிழன் ஆட்சி
தழைக்க விரைந்தோடி...
தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
வீசுக புயலே
வீசுக புயலே! வீசுக புயலே!
விடுதலை உணர்வில் ஆடினர் தமிழர்!
வீசுக... வெள்ளம் விரைந்து வரட்டும்!
வெடித்துப் பாய்க! விண்ணை மோதுக!
வீசுக புயலே.... வீசுக நன்றாய்!
வெள்ளி வாளை விசிறி மின்னுக!
வீசுக சிறையின் வேலி விழட்டும்!
வெளுத்து வாங்குக! வெற்றி நமதே!
மண்ணைக் குடைந்தால் மணிகள் கிடைக்கும்!
மலையைக் குடைந்தால் வைரம் கிடைக்கும்!
விண்ணைக் குடைந்தால் நிலவு கிடைக்கும்!
வேறெது வேண்டும்? இங்குள மாற்றார்
கண்ணைக் குடைந்தால் விடிவு கிடைக்கும்!
கவிதை பாடவோர் வாய்ப்புக் கிடைக்கும்!
எண்ணிக் குடைந்து வீசுக புயலே!
எங்கள் விடுதலை இயக்கம் நீயே!
நாளை விடிந்தால் வேலை முடிந்தது!
நாடு பிறந்தது! வீசுக புயலே!
கோழையர் இல்லை தமிழக மண்ணில்!
குமுறி ஆடுக! ஆடுக பார்ப்போம்!
தோளை நிமிர்த்திய வீரர் துள்ளினார்!
தொல்லை மடிந்தது வீசுக புயலே!
வேளை மலர்ந்தது! வீசுக! வீசுக!
விளித்தது சங்கம் ஒலித்தது முரசே!
விடுதலை உணர்வில் ஆடினர் தமிழர்!
வீசுக... வெள்ளம் விரைந்து வரட்டும்!
வெடித்துப் பாய்க! விண்ணை மோதுக!
வீசுக புயலே.... வீசுக நன்றாய்!
வெள்ளி வாளை விசிறி மின்னுக!
வீசுக சிறையின் வேலி விழட்டும்!
வெளுத்து வாங்குக! வெற்றி நமதே!
மண்ணைக் குடைந்தால் மணிகள் கிடைக்கும்!
மலையைக் குடைந்தால் வைரம் கிடைக்கும்!
விண்ணைக் குடைந்தால் நிலவு கிடைக்கும்!
வேறெது வேண்டும்? இங்குள மாற்றார்
கண்ணைக் குடைந்தால் விடிவு கிடைக்கும்!
கவிதை பாடவோர் வாய்ப்புக் கிடைக்கும்!
எண்ணிக் குடைந்து வீசுக புயலே!
எங்கள் விடுதலை இயக்கம் நீயே!
நாளை விடிந்தால் வேலை முடிந்தது!
நாடு பிறந்தது! வீசுக புயலே!
கோழையர் இல்லை தமிழக மண்ணில்!
குமுறி ஆடுக! ஆடுக பார்ப்போம்!
தோளை நிமிர்த்திய வீரர் துள்ளினார்!
தொல்லை மடிந்தது வீசுக புயலே!
வேளை மலர்ந்தது! வீசுக! வீசுக!
விளித்தது சங்கம் ஒலித்தது முரசே!
வீசுக புயலே
வீசுக புயலே! வீசுக புயலே!
விடுதலை உணர்வில் ஆடினர் தமிழர்!
வீசுக... வெள்ளம் விரைந்து வரட்டும்!
வெடித்துப் பாய்க! விண்ணை மோதுக!
வீசுக புயலே.... வீசுக நன்றாய்!
வெள்ளி வாளை விசிறி மின்னுக!
வீசுக சிறையின் வேலி விழட்டும்!
வெளுத்து வாங்குக! வெற்றி நமதே!
மண்ணைக் குடைந்தால் மணிகள் கிடைக்கும்!
மலையைக் குடைந்தால் வைரம் கிடைக்கும்!
விண்ணைக் குடைந்தால் நிலவு கிடைக்கும்!
வேறெது வேண்டும்? இங்குள மாற்றார்
கண்ணைக் குடைந்தால் விடிவு கிடைக்கும்!
கவிதை பாடவோர் வாய்ப்புக் கிடைக்கும்!
எண்ணிக் குடைந்து வீசுக புயலே!
எங்கள் விடுதலை இயக்கம் நீயே!
நாளை விடிந்தால் வேலை முடிந்தது!
நாடு பிறந்தது! வீசுக புயலே!
கோழையர் இல்லை தமிழக மண்ணில்!
குமுறி ஆடுக! ஆடுக பார்ப்போம்!
தோளை நிமிர்த்திய வீரர் துள்ளினார்!
தொல்லை மடிந்தது வீசுக புயலே!
வேளை மலர்ந்தது! வீசுக! வீசுக!
விளித்தது சங்கம் ஒலித்தது முரசே!
விடுதலை உணர்வில் ஆடினர் தமிழர்!
வீசுக... வெள்ளம் விரைந்து வரட்டும்!
வெடித்துப் பாய்க! விண்ணை மோதுக!
வீசுக புயலே.... வீசுக நன்றாய்!
வெள்ளி வாளை விசிறி மின்னுக!
வீசுக சிறையின் வேலி விழட்டும்!
வெளுத்து வாங்குக! வெற்றி நமதே!
மண்ணைக் குடைந்தால் மணிகள் கிடைக்கும்!
மலையைக் குடைந்தால் வைரம் கிடைக்கும்!
விண்ணைக் குடைந்தால் நிலவு கிடைக்கும்!
வேறெது வேண்டும்? இங்குள மாற்றார்
கண்ணைக் குடைந்தால் விடிவு கிடைக்கும்!
கவிதை பாடவோர் வாய்ப்புக் கிடைக்கும்!
எண்ணிக் குடைந்து வீசுக புயலே!
எங்கள் விடுதலை இயக்கம் நீயே!
நாளை விடிந்தால் வேலை முடிந்தது!
நாடு பிறந்தது! வீசுக புயலே!
கோழையர் இல்லை தமிழக மண்ணில்!
குமுறி ஆடுக! ஆடுக பார்ப்போம்!
தோளை நிமிர்த்திய வீரர் துள்ளினார்!
தொல்லை மடிந்தது வீசுக புயலே!
வேளை மலர்ந்தது! வீசுக! வீசுக!
விளித்தது சங்கம் ஒலித்தது முரசே!
தோழி
நானோர் கனாக்கண்டேன் தோழி! - தமிழ்
நாட்டின் விடுதலை கேட்கப் பிறந்தவர்
தானை நடத்தினார் தோழி! - அங்கு
சட்டம் உடைந்தது! பகைவர் தலைகள்
வானில் பறந்தன தோழி! - இந்த
வையம் குருதியில் தோய்ந்து கிடந்தது!
மானத்தின் வேகமோ தோழி! - தமிழ்
மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்!
ஈழத்தில் சிங்களம் என்றார்! - தமிழ்
இல்லத்தில் இந்திதான் என்றும் குலைத்தார்!
வேழத்தை வென்றவர் நாட்டில் - இந்த
வீணர்கள் ஏன் வந்து மோதினார் தோழி?
கூழுக்கு வழியற்றுப் போனோம் - என்றால்
குலவீரம் கூடவா இல்லாமல் போனோம்
பாழுக்கு வந்தார்கள் தோழி - வந்த
பகைவரை வணங்காத தமிழ்நாடு வாழி!
வீண் சண்டை போட்டதும் இல்லை! - தமிழன்
வீணாக வந்ததை விட்டதும் இல்லை!
தூணொன்று சாய்ந்தாலும் சாயும் - தமிழர்
தோள்வீரம் இதுவரை சாய்ந்ததே இல்லை!
ஆணென்று வாழ்ந்தவரெல்லாம் - இங்கே
ஆமைபோல் அடிமைபோல் உயிர் வாழ்ந்ததில்லை!
பூணாத போர்க்கோலம் பூண்டார்! - பகைவர்
புலியோடு மோதினார் என்செய்வோம் தோழி?
காதலர் வரவில்லை தோழி! - அவர்
களத்திலே இருக்கட்டும்! இங்கென்ன வேலை?
மோதட்டும் பகைவர்கள் முன்னால் - தோழி
முத்தமும் சத்தமும் வெற்றிக்குப் பின்னால்!
மாதர்கள் வீரமே பெரிதாம்! - அவர்
மாண்டாலும் போரிலே மாளட்டும் என்பேன்!
ஆதலால் இசைபாடு தோழி - தமிழ்
அன்னையின் புகழ்பாடு! வாழட்டும் நாடு!
நாட்டின் விடுதலை கேட்கப் பிறந்தவர்
தானை நடத்தினார் தோழி! - அங்கு
சட்டம் உடைந்தது! பகைவர் தலைகள்
வானில் பறந்தன தோழி! - இந்த
வையம் குருதியில் தோய்ந்து கிடந்தது!
மானத்தின் வேகமோ தோழி! - தமிழ்
மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்!
ஈழத்தில் சிங்களம் என்றார்! - தமிழ்
இல்லத்தில் இந்திதான் என்றும் குலைத்தார்!
வேழத்தை வென்றவர் நாட்டில் - இந்த
வீணர்கள் ஏன் வந்து மோதினார் தோழி?
கூழுக்கு வழியற்றுப் போனோம் - என்றால்
குலவீரம் கூடவா இல்லாமல் போனோம்
பாழுக்கு வந்தார்கள் தோழி - வந்த
பகைவரை வணங்காத தமிழ்நாடு வாழி!
வீண் சண்டை போட்டதும் இல்லை! - தமிழன்
வீணாக வந்ததை விட்டதும் இல்லை!
தூணொன்று சாய்ந்தாலும் சாயும் - தமிழர்
தோள்வீரம் இதுவரை சாய்ந்ததே இல்லை!
ஆணென்று வாழ்ந்தவரெல்லாம் - இங்கே
ஆமைபோல் அடிமைபோல் உயிர் வாழ்ந்ததில்லை!
பூணாத போர்க்கோலம் பூண்டார்! - பகைவர்
புலியோடு மோதினார் என்செய்வோம் தோழி?
காதலர் வரவில்லை தோழி! - அவர்
களத்திலே இருக்கட்டும்! இங்கென்ன வேலை?
மோதட்டும் பகைவர்கள் முன்னால் - தோழி
முத்தமும் சத்தமும் வெற்றிக்குப் பின்னால்!
மாதர்கள் வீரமே பெரிதாம்! - அவர்
மாண்டாலும் போரிலே மாளட்டும் என்பேன்!
ஆதலால் இசைபாடு தோழி - தமிழ்
அன்னையின் புகழ்பாடு! வாழட்டும் நாடு!
Labels: காசி ஆனந்தன்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home