எஞ்சியவையோடு இருந்துகொண்டிருக்கிறேன்
இரவு
எதிர்கொள்ளச்
சில முகங்களை வேண்டி
இவ்வேளைக்குள்
புதைந்துகொண்டிருக்கிறேன்
பெருகும் கடலெனக்
கடந்துகொண்டிருக்கின்றன
உறவுகள்
ஒரு பறவையென
எங்கிருந்தோ தன் பிரியத்தில் மிதந்தபடி வந்திருக்கும்
சினேகிதியின் கைகள் பற்ற
எத்தனிக்கும் தொலைவு கூடிய
என் ஸ்பரிசங்கள்
இம்முறையும்
அவளைப் போய்ச் சேரவில்லை
எவர்மீதும் குறுக்கிடாத
ஏனைய காரியங்களுடன்
பதுங்கிக்கொண்டிருக்கிறேன்
எப்போதோ
கவனமின்றித் தவறிய
காரியங்களுக்கான
பாவமன்னிப்புகள்
எனக்கு இன்னும்கூட
இருந்துகொண்டிருக்கின்றன
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home