Wednesday, 19 November 2014

மட்டன் கீமா சூப்

டயட்டில் இருப்போர் மதிய வேளையில் உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். அதிலும் ஒரு கப் மட்டன் சூப் குடித்தால் மதிய உணவே உட்கொள்ள அவசியமில்லை. 

சரி, உங்களுக்கு மட்டன் கீமா சூப் செய்ய தெரியுமா? இல்லாவிட்டால், தொடர்ந்து படியுங்கள். இங்கு அந்த மட்டன் கீமா சூப்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டன் கீமா சூப்


தேவையான பொருட்கள்: 

மட்டன் கீமா - 100 கிராம் (நன்கு நீரில் கழுவியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - டீஸ்பூன் 
துவரம் பருப்பு - 50 கிராம் (நன்கு நீரில் கழுவியது) உடைத்த 
பாசுமதி அரிசி - 1 டேபிள் ஸ்பூன் (நன்கு நீரில் கழுவியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
நெய் - 3 டீஸ்பூன் 
புதினா - சிறிது 
கொத்தமல்லி - சிறிது 
ஏலக்காய் - 2 பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 2 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 

பின்பு அதில் துவரம் பருப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து அதில் மட்டன் கீமா சேர்த்து பிரட்டி, பின் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். 

பிறகு அதில் புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கினால், மட்டன் கீமா சூப் ரெடி!!!



Labels: ,

தாம்பத்தியம் நமக்குச் சொல்லித் தரும் வித்தியாசமான விஷயங்கள்!!!

ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கையில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் உடலுறவு நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். 

அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத்திருப்பதுடன் உடல் கூறுகளுக்கு நன்றாகச் செயல்பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது. சில ஜோடிகள் படுக்கையில் தங்களுடைய செயல்திறனை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். 

காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.



இது மன அழுத்தத்திலிருந்து விடுபட மிகச்சிறந்த வழி உடலில் அல்லது மனதில் உள்ள அழுத்தத்தை அல்லது நெருக்கடியைக் குறைக்க உறவு கொள்ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆனால் இது உண்மையாகவே மன மற்றும் உடல் ரீதியான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.



உங்களுடைய முரட்டுத்தனம் வெளிப்படும் உங்களுடைய முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடுபடும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.



தொடு உணர்வின் முக்கியத்துவம் உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவில் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணைவரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணைப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள். 



உங்கள் ஆயுளை அதிகரிக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளையும், கசப்பான உணவுகளையும் சாப்பிட்டு முயற்சி செய்பவரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர்களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.




அது உங்களை அன்பிற்காக ஏங்க வைக்கும் இது உங்களை, குறிப்பாக பெண்களில், காதல் கொள்ளவும் உறவிற்காக ஏங்கவும் செய்யும். இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.




உங்கள் எடையைக் குறைக்க சிறந்த வழி உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சியை விட விரைவாக எடையைக் குறைக்க வல்லது.



ஆணுறைகளின் முக்கியத்துவம் ஆணுறையில்லாமல் உறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.

Labels:

காரமான பேசில் தாய் சிக்கன்

குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதிலும் விடுமுறை நாட்களில் அசைவ உணவை மூன்று வேளையில் நன்கு காரமாக சமைத்து சாப்பிட ஆசைப்படுவோம். இந்த வாரம் தாய் ஸ்டைலில் சிக்கனை காரமாக சமைத்து சாப்பிடுங்கள். 

அதிலும் துளசி இலையின் ஃப்ளேவர் சேர்த்திருக்கும் தாய் சிக்கனை தவறாமல் முயற்சித்துப் பாருங்கள். சரி, இப்போது அந்த காரமான பேசில் தாய் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


காரமான பேசில் தாய் சிக்கன்

தேவையான பொருட்கள்: 

எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ 
துளசி இலை - 1/2 கப் 
சிவப்பு மிளகாய் - 3 (நறுக்கியது) 
பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
மீன் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 

செய்முறை: 

முதலில் சிக்கனை நன்கு சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மீன் சாஸ் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

 மற்றொரு அடுப்பில் வேறொரு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துளசி இலைகளை சேர்த்து மொறுமொறுவென்று வறுத்து இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மற்றொரு அடுப்பில் உள்ள சிக்கனில் மிளகாய், சோயா சாஸ், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைவில் வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். 

சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள துளசி இலைகளை சேர்த்து பிரட்டினால், பேசில் தாய் சிக்கன் ரெடி!!!


Labels:

சுண்டைக்காய் வத்தக் குழம்பு..

தமிழ்நாட்டில் கிராமபுறங்களில் சமைக்கப்படும் ஒரு பிரபலமான ரெசிபி தான் சுண்டைக்காய் வத்தக் குழம்பு. இந்த வத்தக் குழம்பானது அருமையான ருசியில் இருக்கும். அதிலும் இதனை சூடான சாதத்துடன், நெய் சேர்த்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் வர முடியாது. 

இங்கு கிராமபுறங்களில் செய்யப்படும் சுண்டைக்காய் வத்தக் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

சுண்டைக்காய் வத்தக் குழம்பு

தேவையான பொருட்கள்: 

சுண்டைக்காய் வத்தல் - 2 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பூண்டு - 10 பற்கள் 
புளிச்சாறு - 1 கப் 
கடுகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

மசாலாவிற்கு... 

மல்லி - 2 டேபிள் ஸ்பூன் 
வரமிளகாய் - 10 
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
அரிசி - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 2 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
வெந்தயம் - 1 டீஸ்பூன் 
பூண்டு - 6 பற்கள் 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். 

பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, பின் அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 

அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சீரகம், கடுகு மற்றும் சுண்டைக்காய் சேர்த்து தாளித்து, பின் இதனை குழம்புடன் சேர்த்து, மீண்டும் 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுண்டைக்காய் வத்தக் குழம்பு ரெடி!!! 

Labels:

மிளகு அவல்

மாலையில் குட்டி டிபன் போன்று ஏதேனும் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், மிளகு அவலை முயற்சித்துப் பாருங்கள். அதிலும் பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இது ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் போன்று இருக்கும். மேலும் குளிர்காலத்தில் டீ/காபி குடிக்கும் போது, இதனை செய்து சாப்பிடலாம். 

இங்கு அந்த மிளகு அவலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள்.

மிளகு அவல்

தேவையான பொருட்கள்: 

அவல் - 3/4 கப் 
மிளகு - 1 டீஸ்பூன் 
முந்திரி - 5 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

தாளிப்பதற்கு... 

எண்ணெய் - 2 டீஸ்பூன் 
நெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
வரமிளகாய் - 2 

செய்முறை: 

முதலில் மிளகை வாணலியில் போடடு வறுத்து இறக்கி குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் அவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும். 

பின் முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின்பு அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அவலை நன்கு கழுவி நீரை வடித்துவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 

பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பெப்பர் அவல் ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/soups-snacks-drinks/2014/pepper-poha-recipe-006948.html

Labels:

சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!!

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? எதுவுமே பயனளிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள், கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்க நிறைய பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது. 

அதில் முதன்மையானது தான் எலுமிச்சை. ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க... எலுமிச்சை எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இவை பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் பொருளாக உள்ளது. அதிலும் இதில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்திருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதோடு, கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம். 

கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும்... அதற்கு எலுமிச்சையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அவை சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை எலுமிச்சையை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தை விரைவில் வெண்மையாக்கலாம்.

 

டிப்ஸ் 1 எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.



டிப்ஸ் 2 எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.



டிப்ஸ் 3 எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.



டிப்ஸ் 4 ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.




டிப்ஸ் 5 பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.



டிப்ஸ் 6 வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.



டிப்ஸ் 7 ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.


டிப்ஸ் 8 எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.







Labels:

நெத்திலி கருவாட்டு குழம்பு..

பலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில் மீன் குழம்பை விட, கருவாட்டு குழம்பு தான் மிகவும் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும். இங்கு கருவாட்டில் ஒரு வகையான நெத்திலி கருவாட்டைக் கொண்டு செய்யப்படும் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. 

இது மிகவும் ஈஸியான செய்முறை. உங்களுக்கு கருவாட்டு குழம்பு செய்யத் தெரியாதெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள நெத்திரி கருவாட்டு குழம்பின் செய்முறையைப் படித்து, நெத்திலி கருவாட்டு குழம்பு 

தேவையான பொருட்கள்: 

நெத்திலி கருவாடு - 1 கப் 
கத்திரிக்காய் - 3 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லித் தூள் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் 
வறுத்த அரிசி மாவு - 1 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
க்காளி - 1 (நறுக்கியது) 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
புளி - 1 எலுமிச்சை அளவு 
கறிவேப்பிலை - சிறிது 
கடுகு - 1 டீஸ்பூன் 
பூண்டு - 5 பற்கள் 
எண்ணெய் - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் கருவாடை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து கழுவிக் கொள்ள வேண்டும். 

பின்னர் புளியை நீரில் 3 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு தேங்காய் மற்றும் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதனை புளிச்சாற்றில் சேர்த்து கலந்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து பூண்டை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். 

பின் அதில் கருவாடை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், வறுத்த அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு வதக்க வேண்டும். 

பிறகு அதில் புளிக் கரைசலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி!!!

Labels: