வயிற்றை பாதுகாக்க தீபாவளி லேகியம் சாப்பிடுங்க…

தீபாவளிக்கு எண்ணெய் பலகராமும், நெய்யில் செய்த பட்சணங்களையும் ஒரு கட்டு கட்டியிருப்போம். திடீரென்று அதிக அளவில் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட்டதால் வயிறு கடா முடா என்று ஒரு வழி செய்து விடும். அஜீரணக் கோளாறு வேறு அவஸ்தையை ஏற்படுத்திவிடும். இதில் இருந்து தப்பிக்க கைவசம் ‘தீபாவளி ஸ்பெசல்' லேகியம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் அனுபவஸ்தர்கள்.
தேவையானப் பொருட்கள்
பெருங்காயம் - 25 கிராம்
பேரிச்சை - கால் கிலோ
வெல்லம் - 100 கிராம்
சீரகம் - 3 டீ ஸ்பூன்
வால்மிளகு - 2
திப்பிலி - 2
நெய் - 25
உப்பு - கால் டீ ஸ்பூன்
செய்முறை :
பேரிச்சையை சுடுதண்ணீரில் நன்கு ஊறவைத்து, கொட்டையை நீக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
வெல்லம் தவிர சீரகம், திப்பிலி, வால்மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்யவும். அடுப்பில் கடாயை வைத்து வெல்லத்தை பொடித்து போடவும்.
நெய் சேர்த்து கரைந்த உடன் பேரிச்சையை போடவும்.
இதனுடன் பொடித்து வைத்துள்ள கலவையைப் போட்டு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
உப்பு சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
கலவை திரண்டு திக்காகி அல்வா பதம் உடன் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
தீபாவளி லேகியம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் ஏற்படாது, வயிறுப் பொருமல் இருக்காது.
சளி பிடிக்காது. இதேபோல் மிளகு, இஞ்சி, ஓமம், திப்பிலி, கொத்தமல்லி, மஞ்சள்தூள், கசகசா, இலவங்கம், ஏலம், வெல்லம், நெய், நல்லெண்ணெய் சேர்த்து வேறு விதமாகவும் தீபாவளி லேகியம் செய்யலாம்.
தீபாவளி லேகியம் கையில் இருந்தால் தைரியமாக தீபாவளி பலகாரத்தை ஒரு பிடி பிடிக்கலாம்.
Labels: இனிப்புகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home