தூதுவளை ரசம்
- தூதுவளை-1 கப்
- தக்காளி-1
- பூண்டு-4 பல்
- புளி-நெல்லிக்காய் அளவு
- உப்பு-தே.அளவு
- துவரம் பருப்பு-கால் கப்
- மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
- ரசப் பொடி-1 டே.ஸ்பூன்
தாளிக்க:
- நெய்-2 டீஸ்பூன்
- கடுகு-1 டீஸ்பூன்
- பெருங்காயம்-2
- கறிவேப்பிலை-1 கொத்து
- கிள்ளிய வர மிளகாய்-2
- கொத்தமல்லித் தழை-அலங்கரிக்க
- முதலில் துவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து கரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
- தூதுவளை இலைகளை கவனமாக முள் குத்தாமல் பார்த்து ஆய்ந்து எடுத்து சுத்தம் செய்து நீரில் அலசி,தண்ணீரை வடித்து வைக்கவும்.
- பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு சுத்தம் செய்த தூதுவளை இலைகளை போட்டு வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
- புளியை கரைத்து எடுத்து பருப்புத் தண்ணீருடன் சேர்த்து,அதனுடன் ரசப் பொடியையும் கலந்து(ரசப் பொடிக்கு-மிளகு,சீரகம்,தனியா-தலா 1 டீஸ்பூன்,2 வர மிளகாய் வைத்து பொடி செய்து அதனுடன் 4 பல் பூண்டையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.இந்த முறையில் செய்தால் ரசம் மிக வாசமாக இருக்கும்), தக்காளியையும் கரைத்துக் கொள்ளவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.
- அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து மீதமுள்ள நெய்யை விட்டு கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை,வர மிளகாய் தாளித்து,வதக்கிய தூதுவளை இலைகளை சேர்த்து,கரைத்து வைத்துள்ள பருப்புத் தண்ணீரை ஊற்றவும்.பூண்டை தட்டி போடவும்.(அல்லது ரசப் பொடியுடனும் சேர்க்கலாம்)
- ரசம் நுரைத்து பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்.
Labels: ரசம் / சூப்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home