எனது சித்திரம்
சிரமமின்றித் திடமாய் வரைகிறேன்
எனது படத்தை
கண்ணாடியில் பிரதிபலிப்பதைக் காட்டிலும்
துல்லியம் மிக்கதாய்ச்
சில கோடுகளின் வழியே
உயிர்ப்பிக்கிறேன் அதனை
அதனுடன் கைகோத்துக்கொள்ள
உரையாட நீ விரும்பலாம்
தவறில்லை
அதன்மீது உனக்குப் பிடித்தமான
உனக்கு
இசைவான
வர்ணங்களை நீ தீட்டக்கூடும்
அல்லது சில கிறுக்கல்களையேனும்
உருவாக்கி அதிலுள்ள மௌனத்தை
நீ உடைக்கலாம்
இருந்தும்
அதற்கும் மேலே
அச்சித்திரம் வரையப்பட்டிருக்கிறது
சில அழுத்தமான கோடுகளால்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home