பூண்டு ரசம்
தேவையானப் பொருட்கள்:
- புளி-எலுமிச்சையளவு
- முழு பூண்டு-ஒன்று
- காய்ந்தமிளகாய்-இரண்டு
- கடுகு-ஒரு தேக்கரண்டி
- பெருங்காயம்- கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை-ஒரு கொத்து
- உப்பு-தேவைகேற்ப
- மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி
- நல்லெண்ணெய்- மூன்று தேக்கரண்டி
- புளியை ஊறவைத்து கரைத்து அந்த புளி தண்ணீரில் தக்காளியைச் சேர்த்து கரைத்து வைக்கவும்.
- பூண்டை தோலுரித்து இலேசாக நசுக்கி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெயை சூடாக்கி அதில் பூண்டை போட்டு இளஞ் சிவப்பாக வதக்கி தனியே எடுத்துவைக்கவும்.
- பின்பு அதே பாத்திரத்தில் புளி கரைச்சலை ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் மஞ்சத்தூளைப் போட்டு கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும் அதில் ரசப்பொடி மற்றும் வதக்கிய பூண்டை போட்டு கலக்கி விட்டு ஒரு இரண்டு நிமிடம் மீண்டும் கொதிக்கவிடவும்.
- பின்பு மற்றொரு சிறிய பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயில் கடுகு காய்ந்தமிளகாய் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு வறுத்து ரசத்தின் மீது கொட்டவும்.
வாரம் ஒரு முறை பூண்டு ரசம் செய்து சாப்பிடுவது உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
Labels: ரசம் / சூப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home