காலை வந்தபோது
என்மீதேறி இழைகையில்
நிலத்தில் கசிந்திருந்தது
கதிரவனின் ஒரு துளி
யாரோ துர்மரணமடைந்திருந்தார்கள்
நான் வழிதவறி நுழைந்த
வீட்டின் ஒரு பகலில்
ஒரு பைத்தியக்காரன்
தாளிட்டிருந்த என் நினைவு கலைத்துத்
திடுக்கிடச் செய்கையில்
மிச்சமிருந்தது
அன்றைய விடியலின்
இறுதிக் கதிர்
இரவின் அகாலத்தினைத்
தன் பாட்டுக்குக் கடக்கும்
குடுகுடுப்பைக்காரனின் குரல் மட்டும்
மனதில் நிறைக்கிறது
அமானுஷ்யத்தை
இருளின் துணையோடு
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home