பாடல்களைப் பற்றி
சிள் வண்டுகள்
இரவுகளைப் பற்றியும்
நட்சத்திரங்கள் மிகுந்த
வானம் பற்றியும் மனம் ததும்பும்
ஏராளமான பாடல்கள்
இருக்கக் கூடும்
என்னிடமும் உண்டு
இசைவின்மையைப் பிரதிபலிக்கும்
இந்த இரவுக்கான பாடல்
அது மொத்த உலகையும் கூட
அபத்தத்திற்குள்ளாகலாம்.
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home