விரியும் பாலை
உருமாறிக்கொண்டிருந்த பொழுதுகளில்
உன்னை நினைத்துக் கொள்வேன்
கூரையில் துடிக்கும் கிளிக்கூண்டின் மணிகளில்
எப்படியோ இசை நுழைந்திடும்
திகிலூட்டும் விதத்தில்
விளையாட்டு மைதானமாகும் இவ்வறைவெளி
சுவர்கள் தம் வேர்க்கால்கள் உதறி
எங்கோ செல்ல
பிடிமானமிழந்து நொறுங்கிவிடுகின்றன
ஜன்னல் கம்பிகள்
தயக்கம் குறைந்த காற்று
தன் கைகளில் என்னை அள்ளிக்கொள்ள
வான்பரப்பெங்கும் மழையென
உதிர்ந்து பரவுவேன் நான்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home