நகரம்
கனவாக
கொஞ்சம் வாசனையாக
மீதிப் பயமாக
எப்போதும் ஒரு சூழலாக
என் கண்களில் படியும் முகங்களின் காடு
இருசக்கர வாகனத்தில் தன் காதலனின் முதுகில்
முலை அழுத்திக்
கடக்கிறாள் ஒருத்தி
வெயிலை மறுத்தபடி
வெயில் பொறுக்கத் தெருக்களில் திரியும் மனிதர்கள்
இந்த நொடியின் இறுதிக் கணத்தில்கூட
அது தின்று செரித்திருக்கலாம்
தன் நீண்ட வீதிகளில்
நடமாடித் திரிந்த
சில எளிய மனிதர்களை
நகரத்து மனிதர்கள்
எனக்காகச் சொல்லிய ஒரு வார்த்தையும்
என்னை வந்து சேர்வதில்லை
என் தாகம் தணிப்பதில்லை
அவர்களது தண்ணீர்
வெகு அருகில் ஓசையாய்ப் பெருகும்
கடல்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home