ஒரு சித்திரத்தை நோக்கி
பாய்ந்தோடும் என் வாகனத்தின்
ஒளி தோங்கி விலகுகிற
சதைத் துணுக்குகளின் மீது
நான் வரைய முயலும்
வேறொரு சித்திரத்தையோ
வனைய விரும்புகிற
ஏதேனும் ஓர் உருவத்தையோ
அனுமதிப்பதேயில்லை
என் பயணங்களில் எதிர்ப்பட்டு
சாலையைக் கடந்துகொண்டேயிருக்கும்
ஒரு மனநோயாளி
அவனது கனவுகளை அடைக்காத்தபடி
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home