Wednesday, 17 April 2013

தாம்பத்தியம்

என்னைத் தழுவிச் செல்லும்
தென்றல் அறியும்
எனது மென்மை

என்னைச் சிதைத்து அழிக்கும்
வாழ்க்கை அறியும்
எனது உறுதி

நான் அணைத்து வளர்க்கும்
குழந்தை அறியும்
எனது நேசம்

என்றாவது வரும்
மழை அறியும்
எனக்குள் இருக்கும் கவிதை
 
பனிபடர்ந்த
புற்கள் அறியும்
எனது காதல்

எனது கவிதைகள் அறியும்
எனது பூகம்பங்கள் அறியும்
என்னை

எப்போதும்
அறிந்ததில்லை நீ
எனக்கு நேர்ந்த
எதையுமே 


எல்லா இடத்திலும்
பொய் சொல்ல வேண்டியிருக்கிறது
கண்ணாடியில்
சிரிக்கும் பொழுதும் கூட

பேசாதே
வாழ்க்கையின் துயரம் பற்றி
பேசு
வாழுதலின் துயரம்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home