தனித்தொரு பொழுது
பிறிதொரு தருணத்தில்
மொட்டை மாடியில் துணையிருக்கிறது
நிலவு
தூரத்துவீடும் விளக்கணைத்துத்
தன்னை விடுவிக்கிறது
இன்றைய விழிப்பின் தவிப்புகளிலிருந்து
உறங்கிவிட்ட
தொட்டிச் செடிகளோடு அமர்ந்திருக்கிறேன்
அதன் தூங்காத ஒரு தளிரை வேண்டி
கைப்பிடிச் சுவரில்
விழிதீட்டும் ஆந்தை
தன்குரல் மட்டும் காட்டி
என்னைத் தவிர்க்க முயல்கிறது
வேறெதையெதையோ நினைவுறுத்தியபடி
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home