தனிமொழி
அதன் அசௌகர்யங்கள் குறித்த
என் கண்டனங்கள்
மின்விசிறியின் அணைப்பிலிருந்தபடியே
இப்பருவத்தில் என்மீது திரளும் வெயிலையும்
மறுபடி மறுபடி நினைவுக்குள் நுழைத்துக்கொள்வேன்
போர்வை வேய்ந்த உடலோடு
பின்னிரவின் கடும்பனி ஏற்படுத்திய
உதட்டு வெடிப்பின் ரணங்களை
நாவினால் நீவியபடி தகாத வார்த்தைகளை விடுவிப்பேன்
வெகு அமர்த்தலாக ஓடிமறைகிற
காலத்தின் பக்கங்கள் கிழிபடும் உடலெங்கும்
இந்தச் சங்கடங்களுக்குப் பதில்சொல்ல முயல்கிற.
எவரிடமும் நான் சொல்ல
ஒரு செய்தி இருப்பதில்லை
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home