Wednesday, 17 April 2013

இடம்




எனக்குத் தெரியும்
காலுடைந்த நாற்காலியின் வருத்தங்களை
திரைகளணியாச் சன்னல்களை
கடிகாரத்தின் மீது படர்ந்துவிட்ட ஒட்டடைகளை
புணர்ந்து பெருகும் நடுநிசிக் கரப்பான்களை
தாழ்ப்பாளில்லாக் குளியலறையில்
தொலையும் அந்தரங்கங்களை

எனக்குத் தெரியும்
எனதிந்தக் காரியங்களையும்
ஓயாத பறத்தல்களுடன்
குழந்தைகள் மீளுமுன்
முடிக்க வேண்டுமென்பதும்

இருந்தும்
இன்னும்கூட நிகழவில்லை
இது எனது இடமென்கிற பிடிமானமும்
ஆதிகாலக் குகைவெளியிலிருந்தென்
வெளியேற்றமும்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home